உள்ளூர் செய்திகள்

கைதான முதியவர் ஜெயக்கொடி.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் போக்சோவில் கைது

Published On 2022-09-10 08:49 GMT   |   Update On 2022-09-10 08:49 GMT
  • சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
  • அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஜெயக்கொடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த சங்கமங்கலம் ஊராட்சி குற்றம் பொருத்தான் இருப்பு கிராம த்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஜெயக்கொடி (57) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுபற்றி சிறுமியின் தாய் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்கொடியை போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

Tags:    

Similar News