உள்ளூர் செய்திகள்

மது பிரியரிடம் கடை விற்பனையாளர் வாக்குவாதம் செய்த காட்சி.


ஆலங்குளம் அருகே டாஸ்மாக் கடையில் மீதி சில்லறை கேட்டவரை தாக்க முயன்ற விற்பனையாளர்-சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

Published On 2022-10-01 09:04 GMT   |   Update On 2022-10-01 09:04 GMT
  • ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
  • நேற்று கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 590 ரூபாய்க்கு மது வாங்கியுள்ளார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

அங்கு விற்பனையாளராக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 590 ரூபாய்க்கு மது வாங்கியுள்ளார். ரூ.600 கொடுத்து மீதி 10 ரூபாய் சில்லரை கேட்டுள்ளார்.

அதற்கு செல்வம் மது வாங்கியதற்கு மொத்த ரூபாயும் சரியாக போய்விட்டது என்றும் மீதி சில்லரை இல்லை என்றும் செல்வம் கூறியுள்ளார். அதற்கு மது பிரியர் மது வாங்கியதற்கான கணக்குகளை திரும்ப அவரிடம் சொல்லி மீதி 10 ரூபாய் கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த விற்பனையாளர் செல்வம் மதுக்கடையின் உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து மது பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் முற்பட்டார். இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

செல்வம் ஏற்கனவே ஆலங்குளம் அருகே மதுக்கடையில் வேலை பார்க்கும் பொழுது மது பிரியர் ஒருவரை சில்லரை கேட்டதற்காக அடித்து உதைத்த வீடியோ சிசிடிவி காட்சிகள் வெளியாகி சிறிது காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பணியில் சேர்ந்து அதே பாணியை கடைபிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags:    

Similar News