உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய மணல் ெகாள்ளையர்கள்
திட்டக்குடி அருகே போலீசாரை கண்டதும் மணல் ெகாள்ளையர்கள் தப்பி ஓடினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அரசு அனுமதியின்றி தினந்தோறும் நள்ளிரவில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக திட்டக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மணல் கொள்ளையர்களிடமிருந்து 2 டிப்பர் லாரிகள், பொக்ந்திலைன் எந்தி ரம், 1 டிராக்டர் டிப்பர் மற்றும் இனோவா கார் உட்பட 2 கார்கள் பறிமுதல் செய்து திட்டக்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் தப்பி ஓடிய மணல் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.