உள்ளூர் செய்திகள்

சம்பங்கி விதைக்கிழங்குகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

போடியில் நவீன முறையில் சம்பங்கி பூக்கள் விவசாயப்பணி தீவிரம்

Published On 2023-09-11 10:22 IST   |   Update On 2023-09-11 10:22:00 IST
  • சம்பங்கி பூக்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விசுவாசபுரம் பகுதி விவசாயிகள் நிலங்களில் சம்பங்கி மலர் விதை கிழங்குகளை விதை க்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • ஒருவேளை மழை பொய்த்துப் போனாலும் சம்பங்கி பூக்கள் விளைச்சல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சொட்டுநீர் பாசன முறையை கையாண்டு விவ சாயம் செய்து வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம், விசுவாசபுரம் சுற்றுப்பகுதி களில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு வரை கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பூக்கள் உற்பத்தி மிகவும் குறைந்து செடிகள் அனைத்தும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனிடையே போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு சில நாட்களாக பெய்த மழை காரணமாக விவசாயி கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது விசுவாசபுரம் பகுதியில் வெள்ளை நிற சம்பங்கி மலர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் விநாயகர் சதுர்த்தி தொடங்கி பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்களும் கோவில் திருவிழாக்களும் தொடர்ந்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் சம்பங்கி பூக்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விசுவாசபுரம் பகுதி விவசாயிகள் நிலங்களில் சம்பங்கி மலர் விதை கிழங்குகளை விதை க்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒருவேளை மழை பொய்த்துப் போனாலும் சம்பங்கி பூக்கள் விளைச்சல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சொட்டுநீர் பாசன முறையை கையாண்டு விவ சாயம் செய்து வருகின்றனர்.

செடிகளைச் சுற்றி களைகள் ஏற்படாமல் இருப்பதற்காகவும் உற்பத்தி செலவுகளை குறைக்கும் வகையிலும் சம்பங்கி பூக்கள் பயிரிடப்படும் நிலம் முழுவதும் தார் பாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாய்களில் துளைகள் இடப்பட்டு சம்பங்கி விதை கிழங்குகள் விதைக்கப்பட்டு நவீன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் செடிகளில் களைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும் .மேலும் தொழிலாளர்கள் தேவையும் குறையும் என்பதால் இதுபோன்ற யுக்தியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News