உள்ளூர் செய்திகள்
வீராணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
- கோகுல் (20). இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டை பகுதிக்கு பூ வாங்க சென்றுள்ளார்.
- அப்போது அந்த வழியாக வந்த கார் கோகுல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் வீராணம் மன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கோகுல் (20). இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டை பகுதிக்கு பூ வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் கோகுல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கோகுல் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.