search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager killed in car collision"

    • கோகுல் (20). இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டை பகுதிக்கு பூ வாங்க சென்றுள்ளார்.
    • அப்போது அந்த வழியாக வந்த கார் கோகுல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் வீராணம் மன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கோகுல் (20). இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டை பகுதிக்கு பூ வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் கோகுல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கோகுல் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகாகொல்லை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.
    • முத்தாண்டி குப்பத்திலிருந்து கொல்லுகாரன்குட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வேகாகொல்லை அய்யனார் கோயில் தெரு மணிகண்டன் (வயது 35) இவர் சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு முத்தாண்டி குப்பத்திலிருந்து கொல்லுகாரன்குட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கீழக்குப்பம் மின்வாரிய அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 108 மூலம் பண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனார்.

    மேலும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனளின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் முத்தாண்டி குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணபிரான் மற்றும் முனிராஜ். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு தேசூரில் இருந்து காரில் வந்தவாசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை கண்ணபிரான் ஓட்டி சென்றார்.

    வந்தவாசி அடுத்த சத்யா நகர் பகுதி அருகே வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதனால் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த கண்ணபிரான் மற்றும் முனிராஜ் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்துக்குள்ளான காரில் இருந்த முனிராஜ் வெளியே மீட்டனர்.

    கண்ணபிரான் மட்டும் காரில் சிக்கி கொண்டு வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி காரின் பக்கவாட்டு கதவை உடைத்து சிக்கி கொண்டி ருந்த கண்ணபிரானை மீட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணபிரான் பரிதாபமாக இறந்தார். முனிராஜிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் போலீசார் கண்ண பிரான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×