உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் பகுதியில் பள்ளி வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

Published On 2023-06-29 04:52 GMT   |   Update On 2023-06-29 04:52 GMT
  • தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி களுக்கு அனுமதி பெறாத தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று வருவதை கண்காணித்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.
  • ஆர்.டி.ஓ. கவிதா ஓமலூர் மெயின் ரோட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வந்த 3 கார்களை பிடித்து தலா 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி களுக்கு அனுமதி பெறாத தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று வருவதை கண்காணித்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.

அதன்படி நேற்று தாரமங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஓமலூர் ஆர்.டி.ஓ. கவிதா ஓமலூர் மெயின் ரோட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வந்த 3 கார்களை பிடித்து தலா 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் வாகன பதிவு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News