உள்ளூர் செய்திகள்

அரிவாளால் வெட்டப்பட்ட ரவுடிக்கு தீவிர சிகிச்சை

Published On 2023-06-27 09:14 GMT   |   Update On 2023-06-27 09:14 GMT
  • நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பெயிண்ட் கடை முன்பு பிரபு நின்று கொண்டு இருந்தார்.
  • அப்போது அங்கு வந்த சுரேஷ், தன் மனைவியின் மொபைல் போனில் பேசுவது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பிரபு (வயது 38). இவர் மீது, காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி உமாராணி (25) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து உமாராணி தன் கணவர் சுரேசிடம் தெரிவித்தார். நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பெயிண்ட் கடை முன்பு பிரபு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ், தன் மனைவியின் மொபைல் போனில் பேசுவது குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவின் தலையில் அறிவாளால் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை அந்த பகுதியினர் மீட்டு சேலத்தில் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரவுடியை வெட்டி விட்டு தப்பி ஓடிய சுரேஷ் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News