உள்ளூர் செய்திகள்

சேலம் இரும்பாலை அருகே காரில் கடத்திய 430 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2023-08-11 07:11 GMT   |   Update On 2023-08-11 07:11 GMT
  • சேலம் இரும்பாலை பகு தியில் உள்ள சாலை வழியாக காரில் குட்கா கடத்தி வருவதாக கொண்ட லாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • வேகமாக வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 40 பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

சேலம்:

சேலம் இரும்பாலை பகு தியில் உள்ள சாலை வழியாக காரில் குட்கா கடத்தி வருவதாக கொண்ட லாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு போலீசார் உதவி கமிஷனர் ஆனந்தி தலைமையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

430 கிலோ குட்கா

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 40 பைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 430 கிலோ எடை கொண்ட அந்த குட்காவின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து அந்த காரை குட்காவுடன் பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த பர்வீன் (24), தயாராம் மாலி (20) என்பது தெரிய வந்தது.

தொடர் விசாரணை

மேலும் அவர்கள் குட்காவை பெங்களூர் மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு கடத்தி சென்றதும், வாகன சோனையில் போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்தது. ெதாடர்ந்து அவ ர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News