உள்ளூர் செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

Published On 2023-06-13 15:35 IST   |   Update On 2023-06-13 15:35:00 IST
  • இமயன் (வயது 36). இவருக்கு திருமணமாகி ராஜப்பிரியா (27) என்ற மனைவி உள்ளார்.
  • இமயனுக்கு சரியான வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து தனது மனைவியிடம் அடிக்கடி வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

சேலம்:

சேலம் குகை ஆண்டிப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் இமயன் (வயது 36). இவருக்கு திருமணமாகி ராஜப்பிரியா (27) என்ற மனைவி உள்ளார். இமயனுக்கு சரியான வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து தனது மனைவியிடம் அடிக்கடி வருத்தப்பட்டு கூறியுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த இமயன் மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News