உள்ளூர் செய்திகள்

15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2023-07-18 15:10 IST   |   Update On 2023-07-18 15:10:00 IST
  • கோவிந்த ராஜ். இவரது மகன் லோகேஷ் (25). இவர் உடலில் பச்சை குத்தும் தொழில் செய்கிறார்.
  • சிறுமியுடன் பழகிய லோகேஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 11-ந் தேதி சிறுமியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

சேலம்:

சேலம் திருமலைகிரியை அடுத்த வேடுகாத்தம்பட் டியை சேர்ந்தவர் கோவிந்த ராஜ். இவரது மகன் லோகேஷ் (25). இவர் உடலில் பச்சை குத்தும் தொழில் செய்கிறார்.

அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு உறவினர் முறையில் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள் ளார். அப்போது சிறுமியுடன் பழகிய லோகேஷ், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 11-ந் தேதி சிறுமியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் மகளிர் போலீசார், நேற்று லோகேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News