உள்ளூர் செய்திகள்

சேலம் புதிய பஸ் நிலையம் பசுமை வெளி பூங்காவில் இறந்து கிடந்த கர்நாடக வாலிபர்

Published On 2023-08-14 15:03 IST   |   Update On 2023-08-14 15:03:00 IST
  • பசுமை வெளி பூங்காவில் இன்று காலை 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.
  • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பசுமை வெளி பூங்காவில் இன்று காலை 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் ஸ்ரீராம்புரம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் எதற்காக சேலம் வந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News