உள்ளூர் செய்திகள்

பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

கருப்பூர் அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2023-06-26 07:56 GMT   |   Update On 2023-06-26 07:56 GMT
  • வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிகரன் (வயது 37). தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
  • இந்த நிலையில், சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

சேலம்:

சேலம் அருகே கருப்பூர், கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிகரன் (வயது 37).

இவர் சீரகாப்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டை விட்டு குடும்பத்துடன் ராமேஸ்வரன் கோவிலுக்கு சென்றார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை, அருகில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் பார்த்து, ஹரிகரனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து ஹரிகரன் தனது நண்பரான சிவபாரதி என்பவரிடம் கூறி நேரில் சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த சிவபாரதி, இந்த கொள்ளை குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதில் இருந்து 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பட்டப்பகலில் இச்சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News