உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் போக்குவரத்து பணிமனை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-12 07:08 GMT   |   Update On 2023-10-12 07:08 GMT
  • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அந்தந்த பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • தாரமங்கலம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு கிளை தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.

தாரமங்கலம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் அந்தந்த பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தாரமங்கலம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு கிளை தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மைய சங்க பொருளாளர் சேகர், கிளைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியா ளர்களை நியமிக்க கூடாது, போதுமான பணியாளர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கிளை பொருளாளர் விஸ்வ நாதன், முருகன், காளிதாஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News