உள்ளூர் செய்திகள்

மணியனூர் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

கொண்டலாம்பட்டி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

Published On 2023-07-01 08:47 GMT   |   Update On 2023-07-01 08:47 GMT
  • பொது மக்கள் அமருவதற்கான இருக்கைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த அவர் பூங்காவை சிறப்பான முறையில் சீரமைத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
  • அம்பேத்கர் வீதியில் கான்கீரிட் சாலை பணியை ஆய்வு செய்த அவர் சாலையின் தரம் நன்றாக உள்ளதா, சாலை உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதையும் அளவீடு செய்து ஆய்வு செய்தார்.

சேலம்:

சேலம் கொண்டலாம் பட்டி மணியனூர் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் ஆய்வு செய்தார். பூங்காவில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சிறுவர்கள் விளையாடு வதற்கான விளையாட்டு உபகரணங்கள், பூங்கா சுத்தம் செய்தல், விளை யாட்டு மைதானம், பொது மக்கள் அமருவதற்கான இருக்கைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த அவர் பூங்காவை சிறப்பான முறையில் சீரமைத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் வீதியில் கான்கீரிட் சாலை பணியை ஆய்வு செய்த அவர் சாலையின் தரம் நன்றாக உள்ளதா, சாலை உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதையும் அளவீடு செய்து ஆய்வு செய்தார்.

அப்பகுதி பொது மக்களிடம் குடிதண்ணீர் வசதி, கழிவுநீர் சாக்கடை வசதி, கழிப்பறை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என கேட்ட போது அப்பகுதி பொதுமக்கள் அனைத்து வசதிகளும் உள்ளது என தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் சாக்கடை தண்ணீர் எங்கும் தேங்காத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு அறிவுறுத் தினார்.

தொடர்ந்து அம்பாள் ஏரி புனரமைப்பு செய்யும் பணியையும் ஆணையாளர் ஆய்வு செய்தார். ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? ஏரியை புனர மைப்பு செய்ய என்ன என்ன பணிகள் மேற்கொள்ளப் படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். சேலம் மாநகராட்சி குகை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின் முன்னேற்றம் குறித்தும், கட்டடப்பணியின் தரம் குறித்தும் ஆய்வு செய்த ஆணையாளர் பள்ளி கட்ட டங்கள் மிகவும் தரம் வாய்ந்த தாகவும், மழைக்காலங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டடங்கள் உறுதித் தன்மையுடன் கட்டப் பட வேண்டும் என அறி வுறுத்தினார்.

ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் செந்தில்குமார், கவுன் சிலர்கள் கோபால், மோகன பிரியா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News