search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commissioner Inspection"

    • பொது மக்கள் அமருவதற்கான இருக்கைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த அவர் பூங்காவை சிறப்பான முறையில் சீரமைத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
    • அம்பேத்கர் வீதியில் கான்கீரிட் சாலை பணியை ஆய்வு செய்த அவர் சாலையின் தரம் நன்றாக உள்ளதா, சாலை உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதையும் அளவீடு செய்து ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம் பட்டி மணியனூர் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் ஆய்வு செய்தார். பூங்காவில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சிறுவர்கள் விளையாடு வதற்கான விளையாட்டு உபகரணங்கள், பூங்கா சுத்தம் செய்தல், விளை யாட்டு மைதானம், பொது மக்கள் அமருவதற்கான இருக்கைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த அவர் பூங்காவை சிறப்பான முறையில் சீரமைத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் வீதியில் கான்கீரிட் சாலை பணியை ஆய்வு செய்த அவர் சாலையின் தரம் நன்றாக உள்ளதா, சாலை உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதையும் அளவீடு செய்து ஆய்வு செய்தார்.

    அப்பகுதி பொது மக்களிடம் குடிதண்ணீர் வசதி, கழிவுநீர் சாக்கடை வசதி, கழிப்பறை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என கேட்ட போது அப்பகுதி பொதுமக்கள் அனைத்து வசதிகளும் உள்ளது என தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் சாக்கடை தண்ணீர் எங்கும் தேங்காத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு அறிவுறுத் தினார்.

    தொடர்ந்து அம்பாள் ஏரி புனரமைப்பு செய்யும் பணியையும் ஆணையாளர் ஆய்வு செய்தார். ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? ஏரியை புனர மைப்பு செய்ய என்ன என்ன பணிகள் மேற்கொள்ளப் படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

    இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். சேலம் மாநகராட்சி குகை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின் முன்னேற்றம் குறித்தும், கட்டடப்பணியின் தரம் குறித்தும் ஆய்வு செய்த ஆணையாளர் பள்ளி கட்ட டங்கள் மிகவும் தரம் வாய்ந்த தாகவும், மழைக்காலங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டடங்கள் உறுதித் தன்மையுடன் கட்டப் பட வேண்டும் என அறி வுறுத்தினார்.

    ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் செந்தில்குமார், கவுன் சிலர்கள் கோபால், மோகன பிரியா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சேலம் பழைய பேருந்து நிலையத்தை மறு சீரமைக்கும் பணி ரூ,96.53 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
    • இப்பணியினை கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிசனர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் பழைய பேருந்து நிலையத்தை மறு சீரமைக்கும் பணி ரூ,96.53 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணியினை கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிசனர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது தரை மட்டத்தளம், தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மேற்கூரைத் தளம் ஆகியவற்றின் மொத்த பரப்பளவு எவ்வளவு தினமும் வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை, இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறித்தும் வணிக உபயோகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பரப்பளவு குறித்தும் கேட்டறிந்தனர்.

    பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி, கடைகளின் எண்ணிக்கை, வணிக உபயோகம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், வளாகத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்தூக்கிகள் வசதி, நேரம் காப்பாளர் அறை, காவாலர் அறை, போன்ற பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

    திருமணி முத்தாற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலத்தின் நீளம், அதற்காக எத்தனை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. என்பது குறித்தும் பேருந்துகள் மேலே செல்லுவதற்கும், கீழே வருவதற்கும் பாலத்தின் அகலம் போதுமானதாக உள்ளதா என்பதையும், பாலத்தின் இருபுறமும் கைப்பிடி சுவர் அமைத்து பேருந்துகள் பாதுகாப்பாக சென்றுவரவும் , அடுக்குமாடி பேருந்து நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி பாலத்தில் செல்லுவதற்கு போதுமான நடைபாதை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வின் போது மாநகர பொறியாளர் ஜி.ரவி செயற்பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் உள்ளனர்.

    ×