உள்ளூர் செய்திகள்

வியாபாரி மீது தாக்குதல்

Published On 2023-06-07 12:43 IST   |   Update On 2023-06-07 12:43:00 IST
  • சிவகுமார் (வயது 49). இவர், தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
  • 6 பேர் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

ஏற்காடு:

ஏற்காடு டவுன் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருபவர் சிவகுமார் (வயது 49). இவர், தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கி ளில் சென்றார். அப்போது 6 பேர் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதைக்கண்ட சிவ குமார், மோட்டார் சைக்கிளில் 'ஹார்ன்' அடித்தார். இதனால் சாலையில் நின்றவர்களுக்கும். சிவகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அவர்கள் சிவகுமாரை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரின் பேரில் ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த னர். அவர்கள் யார் என்பதை அடை யாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News