உள்ளூர் செய்திகள்

திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடு

Published On 2023-08-17 07:09 GMT   |   Update On 2023-08-17 07:09 GMT
  • திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
  • சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் உள்ள தருமராஜர் உள்ளிட்ட பஞ்சபாண்டவர், கிருஷ்ணபகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். இதேபோல் வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன் கோவில்களிலும் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

Similar News