உள்ளூர் செய்திகள்

நெசவு தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-09-06 07:50 GMT   |   Update On 2023-09-06 07:50 GMT
  • 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை அபகரித்துக் கொண்டதாக கூறி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
  • அபகரித்த வீட்டை தன்னால் மீட்க முடியாமல் மாரிமுத்து குடும்பத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகராட்சி 7-வது வார்டு அத்தாணி நாகப்ப முதலி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (50) இவர் தனது மனைவி பெரியநாயகம் (45) என்பவரின் பெயரில் உள்ள வீட்டை அதே பகுதியை சேர்ந்த சிலர் வீடு தனக்கு சொந்தம் என்று கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை அபகரித்துக் கொண்டதாக கூறி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அபகரித்த வீட்டை தன்னால் மீட்க முடியாமல் மாரிமுத்து குடும்பத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தனது வீட்டை மீட்டெடுக்க முடியாத விரக்தியில் மாரிமுத்து மனைவி பெரியநாயகம்(45) தாயார் கனகாம்பாள்(75) சித்தப்பா அங்கப்பன்(65) உறவினர் குமார்(50) ஆகியோர் தனது வீட்டிற்கு வெளியே கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கீர்த்தி. மற்றும் தாரமங்கலம் போலீசார் மாரிமுத்து குடும்பத்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News