உள்ளூர் செய்திகள்

புதிய பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தகாட்சி. 

நெல்லை அருகே ரூ. 23.56 லட்சத்தில் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடம் - அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2023-04-28 09:03 GMT   |   Update On 2023-04-28 09:03 GMT
  • வெள்ளாளன்குளம் பஞ்சாயத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை:

பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட வெள்ளாளன்குளம் பஞ்சாயத்துக்கு ரூ. 23.56 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பஞ்சாயத்து தலைவரும், மானூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி தி.மு.க. செயலாளருமான மகாராஜன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் மாரி வண்ணமுத்து, மாரியப்பன், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லிக்கோ ட்டை செல்லத்து ரை, மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி முத்து, பாப்பாக்குடி ஊராட்சிமன்ற தலைவர்கள் ஆனைக்குட்டி பாண்டியன், சொர்ணா, பாலசுப்பிர மணியன், முப்புடாதி, ஒன்றிய கவுன்சிலர்கள் வளர்மதி, சுப்புலட்சுமி, காசி, முபின், முத்துமாரி, சுபாவாணி, மாவட்ட பிரதிநிதிகள் சிவன்பாண்டியன், அருணாசல பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News