உள்ளூர் செய்திகள்

பலத்த மழையால் குஞ்சப்பனை மேலாடுபெட்டு சாலை சேதம்

Published On 2022-06-17 15:58 IST   |   Update On 2022-06-17 15:58:00 IST
இந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஊட்டி;

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது குஞ்சப்பனை ஊராட்சி. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. நேற்றும் இந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைக்கு மேலாடுபெட்டு பகுதியில் சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து சேதமடைந்து உள்ளது. சாலை சேதமடைந்த பணியை ஊராட்சிதலைவர் இமானுவேல் மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News