உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்: உருக்கமான கடிதம் சிக்கியது
- உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம் உருக்கமான கடிதம் கிடைத்தது.
- ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது வினோத்பாபு ஜெயபால் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோத்பாபு ஜெயபால் (வயது 33). தி.மு.க.பிரமுகர். இவர் நெய்வேலியில் உள்ள தனியார் ஐ.ஏ. எஸ். அகாடமியில் வேலை பார்த்த வந்தார். நேற்று காலை தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்த வினோத்பாபு ஜெயபால் கூறி விட்டு சென்றார். வேலை முடிந்த பின்னர் பண்ருட்டி திருவதிகை வாடகை வீட்டில் தங்கினார். அப்போது நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்காமல் இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது வினோத்பாபு ஜெயபால் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் உறவினர்கள், வி.சி.க. மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டு சென்னை- கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. அப்போது மறியல் செய்தவர்களிடம் போலீசார் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து நேற்று மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். வினோத்பாபு ஜெயபால் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் தனக்கு பணிசுமை அதிகமாக உள்ளதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் வினோத்பாபு ஜெயபால் தற்கொலைக்கு காரணமான அதிகாரியை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி உறவினர்கள் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் வினோத்பாபு ஜெயபால் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அகாடமியின் மேலாளர் குழந்தைவேல் என்பவர் வினோத்பாபு ஜெயபால் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.