உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் கைனூர் பகுதியில் கிராம சபை கூட்டம்
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கைனூர் பஞ்சாயத்து தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஏரி மற்றும் குளங்களில் உள்ள நீர் நிலைகளை சுத்தப்படுத்தி நீரை சேமிக்க வேண்டும், குடிநீர் வீணாவதை தவிர்க்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கிராம சபை கூட்டத்தில் கைனூர் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் நரேஷ், பஞ்சாயத்து செயலாளர் கமலக்கண்ணன், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, கீதா, புவனேஸ்வரி, மீனாட்சி, சங்கர் கணபதி, புருஷோத்தனி, விமலா, துரைசாமி மற்றும் 150 க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் கலந்து கொண்டனர்.