உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-03-17 15:23 IST   |   Update On 2023-03-17 15:23:00 IST
  • மது குடித்துவிட்டு பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அருகே உள்ள அவரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு (வயது 25). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் பர்னீச்சர் கடையில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த டெல்லி பாபு சோகமாக காணப்பட்டார். அவரிடம் தாயார் சரஸ்வதி கேட்டதற்கு, உடல் நலம் சரியில்லை என கூறினார்.

இந்த நிலையில் டெல்லி பாபு நேற்று மது அருந்தி விட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சிப்காட் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் டெல்லி பாபு உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News