- 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
- கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த திமிரி தென்கழனி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 43). இவர் ஆற்காட்டில் ஸ்கூட்டர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். உப்புப்பேட்டை அருகே செல்லும்போது குடிபோதையில் இருந்த மூன்று நபர்கள் சுந்தர்ராஜை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் சுந்தர்ராஜை கத்தியால் குத்தி உள்ள னர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனர்.