ஆற்காடு கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
- நாளை மறுநாள் நடக்கிறது
- மின்கோட்ட அதிகாரி தகவல்
ஆற்காடு:
ஆற்காடு மின்கோட்ட செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு அறிவித்துள்ள மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த நாளை மறுதாள் (திங்கட்கிழமை) சிறப்பு. முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
அதன்படி,ரத்தினகிரி மின் பிரிவில் பூட்டுத்தாக்கு ரேஷன் கடை அருகில், மாங் குப்பம் பள்ளி, மேலகுப்பம் ஊராட்சி அலுவலகம், பெரு முகை கிராம நிர்வாக அலு வலகம், அங்கன்வாடி, சம் பங்கி நல்லூர், செங்காநத்தம் பகுதிகளிலும், காவனூர் மின் பிரிவில் பட்டணம். புங்க னூர்,சாம்பசிவபுரம், குப்பம், வெங்கடாவரம், பாலமதி ஆகிய ஊராட்சி அலுவலகங் கள், கத்தியவாடிமின் பிரிவில் தாழனூர், கத்தியவாடி, கீழ் குப்பம், ஆயிலம், அருங்குன் றம் ஆகிய ஊராட்சி அலுவல கங்கள், விஷாரம் மின் பிரி வில் வேப்பூர் கிராம நிர்வாக அலுவலகம், நந்தியாலம் ஊராட்சி அலுவலகம், தென் நந்தியாலம் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.
பொது மக்கள் மின் இணைப்பு எண், ஆதார் எண், செல்போன் எண் போன்ற விவரங்களுடன் வந்து இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.