உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை
- நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரம்
அரக்கோணம்:
அரக்கோணம் நகரின் பிரதான பகுதியான காந்தி ரோட்டின் இருபக்கமும் சுமார் 3 கி.மீ.தூரத்திற்கு வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகலாகி தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாலையின் இருபக்கமும் உள்ள மின் கம்பங்களால் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மின் வாரியத்தினர் ஜோதி நகர் முதல் தாலுகா அலுவலகம் வரை சாலையின் ஓரத்தில் இருந்த கம்பங்களை 10 அடி தூரத்தில் அகற்றி சாலையின் ஓரத்தில் நட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை நெடுஞ்சா லைத் துறையினர் பொக்லைன் மூலம் கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதனால் மின் கம்பங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தொலை தொடர்பு கம்பங்கள் சாலையின் நடுவே இருப்பது போல் காட்சியளிக்கிறது.