உள்ளூர் செய்திகள்
- ரூ.4,37,430 மதிப்பில் வீடு அமைகிறது
- சோளிங்கர் ஒன்றிய அலுவகத்தில் நிகழ்ச்சி நடந்தது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தேரி சித்தாதூரை சேர்ந்த ரஜினி என்பவருக்கு பழங்குடியினர் நல திட்டம் நிதியில் இருந்து ரூ.4,37,430 மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சோளிங்கர் ஒன்றிய அலுவகத்தில் நடந்தது.
ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, ராமன், முனியம்மாள் பிச்சாண்டி, கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.