உள்ளூர் செய்திகள்
ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி அன்னதானம்
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
ரக்கோணம் சுவால்பேட்டை விநாயகர் கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் 59-வது பிறந்த நாளை முன்னிட்டு அரக்கோணம் நகர தலைவர் கே.வி.ரவிச்சந்திரன் தலைமையில் நெமிலி ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன்,ரவி, முன்னிலையில் விநாயகர் கோவிலில் அர்ச்சனை செய்து பின்னர் அன்னதானம் வழங்கினர்.
ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ஹரிதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன் காந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு இனிப்பு அன்னதானம் வழங்கினர். பொதுக்குழு உறுப்பினர் உத்தமன் நன்றி உரை கூறினார்.