உள்ளூர் செய்திகள்

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-07-01 15:07 IST   |   Update On 2023-07-01 15:07:00 IST
  • பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி அறிவுறுத்தலின் பேரில் நெமிலி போலீசார் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு போதை பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தட்சிணாமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் விநாயகம், பள்ளி ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News