உள்ளூர் செய்திகள்
டெங்கு காய்ச்சல், கொரோனா தடுப்பு பணி தீவிரம்
- கொசுமருந்து அடிக்கப்பட்டது
- முகக் கவசம் பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் வலியுறுத்தல்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட் டம், பனப்பாக்கம் பேரூராட் சியில் 15 வார்டுகள் உள்ளன. மொத்தம் 11 ஆயிரத்து 536 பேர் வசித்து வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரவிவருகிறது. இதனை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை தமிழக அரசு ஏற்படுத்திவருகிறது.
நேற்று பனப்பாக்கம் பேரூ ராட்சியில் உள்ள 2-வது வார் டில் உள்ள திருமுருகன் நகர், முத்தீஷ்வரர் நகர், நேதாஜி நகர், எஸ்.ஜி.பி. நகர், மாணிக் கம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 174 வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க கொசுமருந்து அடிக்கப்பட்டது.
மேலும் கொரோனா காய்ச்சல் பரவாமல் இருக்க வீடுதோறும் நிலவேம்பு கசா யம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சியில் வசிக்கும் அனைவரும் முகக் கவசம் பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.