உள்ளூர் செய்திகள்
ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சாலை, சிறுபாலம் கட்டும் பணி
- பூமிபூஜை நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
நெமிலி அடுத்த கீழ்வீதி ஊராட்சியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையினால் ஆதி திராவிடர் காலணிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.இதனால் அப்பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையடுத்து பழுதடைந்த சாலையை சீரமைக்க ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் சாலையின் இருபுறமும் தடுப்புச் சுவருடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, ஒன்றியக்குழு துணைதலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்றதலைவர் ஆனந்தி செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமேகலை வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அர்ச்சனா கலையரசு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.