உள்ளூர் செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி பங்குத் தொகையை அதானிக்கு தாரை வார்ப்பதாக கூறி மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திமிரி பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார்.
திமிரி பேரூர் தலைவர் எல்லப்பன், திமிரி வட்டார தலைவர் கள் பி.மண்ணு, லீலா கிருஷ்ணன், விளாப்பாக்கம் தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார்.
முன்னதாக கையோடு கைகோர்ப்போம் நிகழ்ச்சியாக மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டிக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.