உள்ளூர் செய்திகள்
- குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ெரயில்வே நிலையம் அருகே பலத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக இருந்தார்.
தகவலின் பேரில் காட்பாடி ரெயில்வே போலீசார் விரைந்த வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணையில் இறந்தவர் பாணாவரத்தை சேர்ந்த ராஜேஷ் (30) என்பதும் இவர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.