உள்ளூர் செய்திகள்

சாலை தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி

Published On 2023-07-01 09:33 GMT   |   Update On 2023-07-01 09:33 GMT
  • வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ராணிப்பேட்டை:

சோளிங்கர் தாலுகா, கீழ் கரடிகுப்பம் கிராமம் 1-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கிருஷ்ணகாந்த்(21) காண்டிராக் முறையில் செண்டிரிங் வேலை செய்து பார்த்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகாந்த் வாலாஜாவிலிருந்து ஆற்காடு நோக்கி செல்வதற்காக, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

ராணிப்பேட்டை பாலாறு பாலம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ண்காந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் கிருஷ்ணகாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News