உள்ளூர் செய்திகள்
பைக்கில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
- போலீசார் விசாரணை
- ரூ.13 ஆயிரம் மதிப்புள்ளவை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காட்டில் உள்ள செய்யாறு சாலையில் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர் ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் (வயது 62), என்பதும், மோட்டார் சைக்கிளில் பையில் மறைத்து சுமார் 14 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.