உள்ளூர் செய்திகள்

ரூ.2.கோடியில் புதிய பஸ் நிலையம்

Published On 2023-07-07 10:18 GMT   |   Update On 2023-07-07 10:18 GMT
  • கடைகளை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகற்றி வருகின்றனர்
  • கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

ராணிப்பேட்டை:

வாலாஜா நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகற்றி வருகின்றனர்.

தற்போது பயணிகளின் வசிக்காக பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ்

ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

பஸ் நிலையம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News