உள்ளூர் செய்திகள்
சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து
- எலக்ட்ரிக் சாதனங்கள் எரிந்து நாசம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
வேலூர் மாவட்டம் ஊசூரை அடுத்த வீரரெட்டிபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46).
இவர் ராணிப் பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் சினிமா தியேட்டர் நடத்தி வருகிறார். இந்தநிலை யில் விஜய்யின் வாரிசு படத்தை நேற்று மாலை 6 மணி அளவில் முதல் ஷோ நடத்துவதற்காக சோதனை செய்துள்ளார்.
அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு திரை மற்றும் ஸ்பீக்கர், ஒயர்கள் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த திடீர் தீ விபத்தினால் ஜெயபிரகாசுக்கும லேசான தீ காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.