உள்ளூர் செய்திகள்

2 பள்ளி மாணவர்கள் மாயம்

Published On 2023-01-03 10:08 GMT   |   Update On 2023-01-03 10:08 GMT
  • பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை
  • போலீசில் புகார்

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய 2 மாணவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு இருவரும் சேர்ந்து சென்றனர். பள்ளி முடிந்து 2 மாணவர்களும் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அக்கம் பக்கத்தில் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி உள்ளனர். மாணவர்கள் கிடைக்காததால் ஆற்காடு நகர போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர்களை தேடி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே இது போல் மாயமாகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News