உள்ளூர் செய்திகள்

வாள்-கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Published On 2023-06-22 13:44 IST   |   Update On 2023-06-22 13:44:00 IST
  • வாள்-கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைதானார்.
  • முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

பசும்பொன்

கமுதி அருகே உள்ள அபிராமம் பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை சோதனையிட்டனர்.

அப்போது வாள் மற்றும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அைத பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் அபிராமம் அருகே உள்ள தரைக்குடி கிராமத்தை சேர்ந்த பொன்முத்துராமலிங்கம் (வயது 22) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News