உள்ளூர் செய்திகள்

'அல்வா' கொடுக்கும் போராட்டம்

Published On 2022-08-11 08:37 GMT   |   Update On 2022-08-11 08:37 GMT
  • கீழக்கரையில் ‘அல்வா’ கொடுக்கும் போராட்டம் நடந்தது.
  • காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பில் நடந்தது.

கீழக்கரை

கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையை மேம்படுத்த கோரியும், சட்டசபை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.வை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பில் பொதுமக்களுக்கு 'அல்வா' கொடுக்கும் போராட்டம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், வி.சி.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா, நகர் செயலாளர் பாசித் இலியாஸ், சி.பி.எம். ரெட் ஸ்டார் மாவட்ட செயலாளர் யோகேஸ்வரன், ம.நே.ம., கட்சி செய்யது இப்ராகிம், வீர குல தமிழர் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மது கணேஷ் உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News