உள்ளூர் செய்திகள்

வலையை இழுத்த மீனவர் கடலில் தவறி விழுந்து சாவு

Published On 2023-09-19 07:08 GMT   |   Update On 2023-09-19 07:08 GMT
  • வலையை இழுத்த மீனவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.
  • தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு மீனவ கிரா மத்தை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (வயது 47). இவர் நேற்று சக மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். கடலில் வலையை விரித்தி ருந்த நிலையில் மீன்கள் சிக்கியதும் அதனை பட குக்கு இழுத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜான் பிரிட்டோ நிலை தடுமாறு கடலுக்குள் விழுந்தார். இதைப்பார்த்த படகில் இருந்த மற்ற மீன வர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கினார்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிருக்கு ஆபத் தான நிலையில் அவரை மீட்டவர்கள் கரை திரும்பி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அற் குற்குள் ஜான் பிரிட்டோ பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News