- சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
- மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,
ராமநாதபுரம்
தமிழ்நாடு சிறுபான்மை யினர் (டாம்கோ), பிற்படு த்தப்பட்டோர் (டாப் செட்கோ) பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள் மூலம் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2022--23 ஆண்டுக்குரிய தனி நபர் கடன், சுய உதவிக்குழு, சிறுதொழில் தொடங்கவும், கல்விக்கடன் வழங்கவும் சிறப்பு முகாம் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.
திருவாடானையில் நாளை (8-ந்தேதி), ஆர்.எஸ்.மங்கலத்தில் 9-ந் தேதி, கடலாடியில் 13-ந் தேதி, கமுதியில் 14-ந் தேதி, பரமக்குடியில் 16-ந் தேதி, கீழக்கரை 19-ந் தேதி, ராமேசுவரத்தில் 20-ந் தேதி, முதுகுளத்துாரில் 22-ந் தேதிகளில் முகாம் நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு ராம நாதபுரம் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மை யினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,