உள்ளூர் செய்திகள்
- விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
- ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட விளங்குளத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார். முகாமில் 93 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 54 ஆயிரத்து 573 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் ஜெயகுமார், தனி துணை வட்டாட்சியர் மாரிசெல்வராஜ், மண்டல துணை வட்டாட்சியர் முருகேசன், வருவாய் அலுவலர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.