உள்ளூர் செய்திகள்

விலை உயர்வால் தக்காளி வாங்குவதை தவிர்க்கும் மக்கள்

Published On 2023-07-03 07:28 GMT   |   Update On 2023-07-03 07:28 GMT
  • விலை உயர்வால் தக்காளி வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்கின்றனர்.
  • பெரும்பாலான ஓட்டல்களில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னியை வைப்பதை தவிர்த்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைவால் விலை அதிகரித்த நிலையில், வாங்க பொதுமக்கள் தக்காளி வாங்க தயாராக இல்லை. இதனால் மாலை நேரத்தில் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.120-க்கு விற்பனை செய்யப் பட்டது. நேற்று காலை ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்றது. இதன் காரணமாக மக்கள் தக்காளியை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

இதனால் தக்காளிகள் விற்பனை ஆகாமல் அதிக அளவில் குவித்து வைத்தி ருந்தனர். பழங்கள் அழுகும் நிலைக்கு சென்றதும் மாலையில் ரூ.100-க்கு விற்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.

தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான ஓட்டல்களில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னியை வைப்பதை தவிர்த்துள்ளனர்.

Tags:    

Similar News