உள்ளூர் செய்திகள்

கீழக்கரை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.

நவீன தகனமேடை அமைக்கும் பணி ரத்து

Published On 2022-10-14 08:45 GMT   |   Update On 2022-10-14 08:45 GMT
  • நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதலின் படி நவீன தகன மேடை அமைக்கும் பணி ரத்தானது.
  • நூலகம் கட்ட நிலம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானம் கூட்ட த்தில் நிறைவேற்ற ப்பட்டது.

கீழக்கரை

கீழக்கரை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்வராஜ், துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.

பணிகள் ரத்து

கீழக்கரை இந்துக்கள் மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன தகனமேடை அமைக்க அப்பகுதி பொதுமக்களால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை ஏற்று பணி உத்தரவு மற்றும் பணி ஒப்பந்தம் ஆகியவற்றினை ரத்து செய்ய மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்க ப்பட்டது.

கீழக்கரை நகரில் அமைந்து உள்ள நூலகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத இட நெருக்கடி யான வாடகைக் கட்டி டத்தில் இயங்கி கொண்டி ருக்கிறது. எனவே நகராட்சிக்கு சொந்தமான கீழக்கரை செம்பி ஆயில் கம்பெனி அருகில் உள்ள இடத்தில் நூலகம் கட்ட நிலம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானம் கூட்ட த்தில் நிறைவேற்ற ப்பட்டது.

கூட்டத்தில் நகர் மன்ற துணை தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் பேசுகையில், கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் சில வார்டுகளை தவிர மற்ற வார்டுகளுக்கு சரிவர பணிகள் நிறைவேற்ற வில்லை. அனைத்து கவுன்சி லர்களிடமும் நகராட்சி தலைவர் ஆலோசனை செய்து பாரபட்சமில்லா மல் நிதியை அனைத்து வார்டு களுக்கும் பகிர்ந்து ஒதுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கவுன்சிலர்கள் ஷேக் ஹுசைன், முகமது பாதுஷா ஆகியோர் பேசினர். அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கை நிறைவேற்ற விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் செகா னாஸ் ஆபிதா கூறி னார்.

பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா, மேலாளர் தமிழ்ச் செல்வன், உதவியாளர் உதயா, நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் எம்.எம்.கே. முகமது காசிம், சுஐபு, மீரான் அலி, நசீருதீன், பயாஸ்தீன், நவாஸ் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News