உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் பலி

Published On 2023-04-29 13:03 IST   |   Update On 2023-04-29 13:03:00 IST
  • பஸ் மோதி பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். கூலிதொழிலாளி. இவரது மகன் அபிஷேக். இவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை அபிஷேக், கல்லூரியை முடித்துவிட்டு நண்பர் செந்திலேஸ் பாபுவுடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கழுகூரணி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அபிசேக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். படுகாயமடைந்த மாணவர் செந்திலேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News