உள்ளூர் செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேரில் ஆய்வு செய்தார். அருகில் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை மற்றும் பலர் உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர்

Published On 2023-11-21 05:28 GMT   |   Update On 2023-11-21 05:28 GMT
  • வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக் காக அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமாநாதபுரம் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவா டானை, திருச்சுழி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளுக்குரிய வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் எந்தி ரங்கள் உள்ளிட்ட மின்னனு வாக்குப்பதிவு கருவிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் வாக்குகள் எண்ணும் அறை ஆகிய வற்றை பார்வையிட்டார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் வந்து செல்லும் பகுதி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வந்து செல்லும் பகுதி என தனித்தனியே அமைக்கப் பட உள்ள வழித்தடங்களை யும் பார்வையிட்டார்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின்போது பரமக்குடி சார் ஆட்சியர் அப்துல் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதி வேல்மாறன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் முருகே சன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News