உள்ளூர் செய்திகள்

முஷ்டகுறிச்சியில் பஸ் நிறுத்தம் கட்ட பூமிபூஜை

Published On 2023-03-29 13:56 IST   |   Update On 2023-03-29 13:56:00 IST
  • கமுதி முஷ்டகுறிச்சியில் பஸ் நிறுத்தம் கட்ட பூமிபூஜை நடந்தது.
  • இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-கீழ்குடி சாலையில் உள்ள முஷ்டகுறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் மெயின் ரோட்டுக்கு வந்து தான் மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும். இங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால், வெளியூர் செல்பவர்கள், வெயில் மற்றும் மழையில் நின்று சிரமப்படும் நிலை இருந்தது. இங்கு பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட தி.மு.க. கவுன்சிலர் போஸ் சசிக்குமார் தனது மாவட்ட கவுன்சில் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட ஒப்புதல் அளி்ததார். இதையடுத்து பூமி பூஜை நடந்தது. இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News