உள்ளூர் செய்திகள்

தி.மு.க.வினர் அன்னதானம்

Published On 2023-04-06 08:11 GMT   |   Update On 2023-04-06 08:11 GMT
  • பங்குனி உத்திர திருவிழாவில் தி.மு.க.வினர் அன்னதானம் வழங்கினர்.
  • நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், பழச்சாறு மற்றும் மோர் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. சார்பில் நடந்தது. மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.யின் அறிவுரையின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் குணசேகரன், அவரது மகன் அருண் குணசேகரன், ராமநாதபுரம் கார்மேகம், நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெகநாதன், முன்னாள் நகரச்செயலாளர் மங்களேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி பழ.பிரதீப் பழனிவேல், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News